விண்வெளி ஆராய்ச்சியில்.. மனிதனுக்கு பதில் ரோபோவை களமிறக்கும் பிரபல நாடு! சுவாரஸ்ய தகவல்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் முறையாக மனிதருக்கு பதில் ரோபோவை அனுப்ப ரஷ்யா தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றது.
ரஷ்யா நாட்டில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை ஆய்வு செய்ய மனிதனுக்கு பதிலாக மனிதன் வடிவில் தயாரிக்கப்பட்ட ரோபோவை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த ஆய்விற்கு புதிய தலைமுறையின் டெலிடிராய்டு என்று பெயர் வைக்கப்பட்ட மானுடவியல் ரோபோவை அனுப்பி வைக்க உள்ளது. மேலும் இதற்கான பணிகளில் ரஷ்யா நாடு தீவிரம் காட்டி வருகின்றது. சர்வதேச விண்வெளி மாநாடு தற்போது துபாயில் நடைபெற்று வருகின்றது.
இதில் ரஷ்யா நாட்டின் விண்வெளி பயிற்சி மையத்தின் செய்தி தொடர்பாளர் கலந்து கொண்டு கூறியது, விண்வெளி ஆய்வில் மனிதர்களை ஒப்பிடும் போது ரோபோவின் பங்களிப்பு குறைவு தான்.
ஆனாலும் ரோபோக்கள் மண்ணை சேகரிப்பது, துளையிடுவது போன்ற முக்கிய வேலைகளை ஈசியாக செய்து விடும். மனிதர்களால் விண்வெளியில் நீண்ட காலம் ஆய்வு கொள்ள முடியாது.
ஆனால் ரோபோ அப்படி இல்லை. பூமியில் இருந்தே ரோபோவை மனிதன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். மேலும், விண்வெளி ஆய்வில் டெலிட்ராய்டு ரோபோ இப்படி தான் செயல்பட வேண்டும் என்று ஒரு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.