உக்ரைன் போர்க்கைதிகள் 19 பேரை விடுவித்த ரஷ்யா!
ரஷ்யாவின் பிடியில் இருந்து கடந்த செவ்வாயன்று விடுவிக்கப்பட்ட 60 வீரர்கள் உட்பட 76 உக்ரைன் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா, மரியுபோல் நகரத்தை கைப்பற்றி உள்ளது.
அங்குள்ள உக்ரைன் ராணுவ வீரர்களை சரண் அடையும்படி ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு தீவிரமாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் போர்க் கைதிகள் 19 பேரை ரஷ்யா விடுவித்திருக்கிறது.
இதுபற்றி உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் (Iryna Vereshchuk) கூறுகையில்,
‘மற்றொரு கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த முறை விடுவிக்கப்பட்டவர்களில் காயமடைந்தவர்களும் உள்ளனர். இது முக்கியமானது. இப்போது அவர்கள் முழு சிகிச்சையைப் பெற முடியும், மறுவாழ்வும் பெற முடியும்’ என்றார்.
மேலும், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.