மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த ரஷ்யா; ஐவர் பலி 30 இற்கும் மேற்பட்டோர் காயம்
உக்ரைன் ரஷியா இடையேயான போர் ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்து வரும் நிலையில் அவ்வப்போது, ரஷியா உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைன் நகரமான போக்ரோவ்ஸ்க் மீது இரண்டு ரஷிய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்தது.
உயர்மட்ட அவசர அதிகாரி பலி
தாக்குதலில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதேபோல் நடந்த இரண்டாவது தாக்குதலில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் உயர்மட்ட அவசர அதிகாரி கொல்லப்பட்டார். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 19 போலீஸ் அதிகாரிகள், ஐந்து மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர்.
இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.