ரஷ்யாவின் நடவடிக்கை பல்கேரியாவை பாதிக்காது! உக்ரைனுக்காக பணி தொடரும்
ரஷ்யா இனி பல்கேரிய நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டர்களின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 2 பல்கேரிய நிறுவனங்களுக்கும், ஒரு செக் குடியரசு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், அந்த நிறுவனங்களுக்கு ரஷ்யா இனி உதிரி பாகங்களை வழங்காது. இந்த நடவடிக்கையானது பல்கேரியாவை கடுமையாக பாதிக்காது என்றும், உக்ரைனின் ராணுவ உபகரணங்களை பழுதுபார்க்கும் பணியை தடுக்காது என்றும் பல்கேரிய ராணுவ அமைச்சர் ஜாகோவ் கூறி உள்ளார்.
உக்ரைன் ராணுவ உபகரணங்களை சரிசெய்வதை பல்கேரியா தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரூபிளில் பணம் செலுத்த மறுத்ததால் பல்கேரியாவிற்கு ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்தியதைக் குறிப்பிட்ட ஜாகோவ், எரிவாயு கொள்முதலில் என்ன நடந்தோ, அதேபோன்று இப்போது ஹெலிகாப்டர் உரிமங்களிலும் நடந்துள்ளது என்றார்.