ரஷ்யாவின் கெடு முடிந்தது! தொழிற்சாலையில் தஞ்சம் அடைந்த அப்பாவி மக்கள் கதி என்ன?
மரியுபோல் உருக்காலையில் உள்ள உக்ரைன் படையினர் ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடைவதற்கு நேற்று ரஷ்யா கெடு விதித்தது இருந்தது.
ஆனால் உக்ரைன் அடிபணியவில்லை. “சரண் அடைய மாட்டோம்” என்று உக்ரைன் கடற்படை தளபதி செர்ஹி வோலினா கூறினார்.
அவர் வெளியிட்ட காணொளி செய்தியில்,
“காயம் அடைந்த 500 வீரர்கள், பெண்கள், குழந்தைகள் எங்களோடு உள்ளனர், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
கெடு முடிந்த நிலையில் ரஷ்யாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாகும், உருக்காைலையில் தஞ்சம் அடைந்துள்ள அப்பாவி மக்கள் கதி என்ன ஆகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள சுரங்கப்பாதைகள், பட்டறைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பதாக மற்றொரு தகவல் கூறுகிறது.
மரியுபோல் நகரில் 1 லட்சம் பேர் சிக்கி உள்ளனர். அவர்கள் உணவு, குடிநீர், மருந்துகள், வெப்பமூட்டும் கருவிகள் இன்றி தவிக்கின்றனர்.
இந்த நகரை தரை மட்டமாக்க வேண்டும் என்று ரஷியா துடிக்கிறது என உக்ரைன் வெளியுறவு மந்திரி தெரிவித்தார்.
மரியுபோல் நகரை ரஷ்யா பிடித்து விட்டால் தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனின் பரந்த நிலப்பரப்பு, அதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும், அதற்கான வாய்ப்புகள் கணிசமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.