சர்வதேச நீதிமன்றத்திற்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்த ரஷ்யா!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக ரஷ்யா குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக பதிலடி கொடுத்துள்ளது.
அதன்படி கடுமையான குற்றங்களைக் கவனிப்பதற்கு பொறுப்பான நாட்டின் புலனாய்வு குழு, ரஷ்ய ஜனாதிபதியின் பொறுப்பு கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று கூறியது.
மேலும் அரச தலைவர்களுக்கு மற்ற நாடுகளின் அதிகார வரம்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.