போர் எப்போது முடிவுக்கு வரும்? உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கின் பதில்!
போர் தொடர்பான உக்ரைன், ரஷ்யா இடையேயான பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அங்குள்ள ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
உக்ரைன் போரில் ரத்தக்களறி ஏற்படுகிறது. தாக்குதல் தொடர்கிறது. போர் தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையேயான பேச்சு வார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் ராஜ்ய ரீதியில் (பேச்சு வார்த்தை மூலம்)தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். போர்க்களத்தில் உக்ரைன் வெற்றி பெற்றாலும், பேச்சுவார்த்தைக்குப் பின்னர்தான் போர் செயல்பாடுகள் முடிவுக்கு வரும் இவ்வாறு அவர் கூறினார்.