உக்ரைன் பதிலுக்காக காத்திருக்கும் ரஷ்யா
கடந்த மாதம் இஸ்தான்புல்லில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் தனது வரைவு அறிக்கையை ரஷ்யாவிடம் அளித்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தொடர்கின்றன. அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக தனது கோரிக்கைகள் அடங்கிய வரைவு அறிக்கையை உக்ரைனிடம் ரஷ்யா சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கைக்கு உக்ரைனின் பதிலுக்காக ரஷ்யா காத்திருப்பதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
பெஸ்கோவ் வரைவு அறிக்கையை விவரிக்கவில்லை. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததற்கு உக்ரைன் மீது பெஸ்கோவ் குற்றம் சாட்டினார், உக்ரேனிய அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து பின்வாங்குவதாகவும், பேச்சுவார்த்தை செயல்முறையை தீவிரப்படுத்த பெரிதும் விரும்பவில்லை என்றும் கூறினார்.
கடந்த மாதம் இஸ்தான்புல்லில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் தனது வரைவு அறிக்கையை ரஷ்யாவிடம் அளித்தது. அதன் பிறகு இரு தரப்பினரும் எந்த அளவுக்கு பேசிக் கொண்டனர் என்பது தெரியவில்லை.