2 லட்சம் குழந்தைகளை கடத்திய ரஷ்ய ராணுவம்; ரஷ்ய ராணுவம் பரபரப்பு குற்றச்சாட்டு
ரஷ்ய ராணுவம் இதுவரை 2 லட்சம் குழந்தைகளை கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 100வது நாளை நெருங்கி வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போர் குறித்து உக்ரைன் அதிபர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இதன்போது,
ரஷ்ய ராணுவம் உக்ரைனில் இருந்து 2 லட்சம் குழந்தைகளை கட்டாயமாக கடத்தி சென்றுள்ளது. கடத்தப்பட்ட இந்த குழந்தைகள் ரஷ்யாவின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றதாக தெரிவித்த அவர் , குழந்தைகளில் சிலர் பெற்றோர்களிடம் இருந்தும், குடும்பங்களில் இருந்தும் பிரிக்கப்பட்டவர்கள் எனவும் கூறினார்.
இந்த கிரிமினல் திட்டத்தின் நோக்கம் குழந்தைகளை கடத்துவது மட்டுமல்ல, அவர்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பும்போது உக்ரைனை மறந்துவிடுவார்கள் எனவும் சுட்டிக்காட்டிய உக்ரை அதிபர், அவர்களால் திரும்பி வரவே முடியாது எனவும் கூறினார்.
மேலும் இந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை உக்ரைன் தண்டிக்கும், ஆனால் அதற்கு முன் போர்களத்தில், ‘உக்ரைனை யாரும் கைப்பற்ற முடியாது. நாங்கள் சரணடையமாட்டோம். எங்கள் குழந்தைகள் ஒன்றும் உங்கள் உடைமை கிடையாது என்பதை நாம் நிரூபிப்போம் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.