ரஷ்யா விடுவித்த உக்ரேனிய ராணுவ வீரர்: கலங்கடிக்கும் புகைப்படம்
உக்ரைன் ராணுவ வீரர்களை சிறைப்பிடித்துள்ள ரஷ்யா அவர்களை கொடூரமாக துன்புறுத்தியுள்ளதாக அந்த நாடு குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யா விடுவித்துள்ள அந்த வீரரின் புகைப்படம் தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தொடர்ந்து நீடித்து வரும் போரால் இரு நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர்.
மேலும், ரஷ்யாவின் போர் குற்றங்களை உக்ரைன் அவ்வபோது வெளியிட்டு விசாரணையும் முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட உக்ரைன் வீரரின் தற்போதைய நிலையை புகைப்படமாக உக்ரைன் வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவில் துன்புறுத்தப்பட்ட அந்த வீரர் எலும்பும் தோலுமாக பரிதாபமாக காட்சியளிப்பது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.