ரஷ்யா அரசு உக்ரைனை ஏமாற்றுகிறது; அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கீவில் ரஷ்ய படைகள் குறைக்கப்படுவதாக ரஷ்யா அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் என்று பென்டகன்(Pentagon)செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி(John Kirby) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி விரும்பியது. அந்நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையே, இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிகிவ் நகரில் ராணுவ நடவடிக்கையை மிகத் தீவிரமாக குறைப்பதாக ரஷ்யா தெரிவித்தது.
உக்ரைனில் தாக்குதல்களை வெகுவாக குறைப்போம் என்ற ரஷ்யாவின் அறிவிப்பு குறித்து பென்டகன்(Pentagon)செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி(John Kirby) 'உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் திரும்ப பெறப்படவில்லை அவர்கள் இடமாற்றம் தான் செய்யப்படுகிறார்கள்.
கீவில் படைகள் குறைக்கப்படுவதாக ரஷ்ய அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல். உக்ரைனின் பிற பகுதிகளுக்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைக் காண நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.