வாழ்வின் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருக்கும் ரஷ்ய அதிபர் புடின்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. தற்போது வெளியான புதிய மருததுவ அறிக்கையின் படி ,
“தலையில் கடுமையான வலி, மங்கலான பார்வை மற்றும் நாக்கு உணர்வின்மை” போன்ற பிரச்சினைகளினால் அவர் அவதிப்படுவதாகவும், நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
ஓய்வெடுக்க மறுக்கும் புடின்
இந்நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகள் அவர் உயிருடன் இருப்பார் என அந்த மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘‘புடின் தனது வலது கை மற்றும் காலில் பகுதியளவு உணர்வை இழந்துள்ளதாகவும், அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதாகவும், வைத்தியர்கள் குழு முதலுதவி செய்ததாகவும், புடினுக்கு மருந்து எடுத்துக்கொண்டு பல நாட்கள் ஓய்வெடுக்கவும் உத்தரவிட்டதாகவும்‘‘ குறிப்பிடப்படுகின்றது.
இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி ஓய்வெடுக்க மறுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஸ்பானிஷ் செய்தி நிறுவனமான மார்காவின் கூற்றுப்படி,
ரஷ்ய ஜனாதிபதி புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோயுடன் போராடுகிறார் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும், கிரெம்ளினும் ரஷ்ய அமைச்சரும் ரஷ்ய ஜனாதிபதி பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.