கனேடிய மாகாணம் ஒன்றில் மகிழ்ச்சியிலும் உணர்ச்சிப்பெருக்கிலும் ஆழ்ந்துள்ள மக்கள்: காரணம் இதுதான்
கனேடிய மாகாணம் ஒன்றில் மக்கள் மகிழ்ச்சியிலும் உணர்ச்சிப்பெருக்கிலும் ஆழ்ந்துள்ளார்கள். Saskatchewan மாகாண மக்கள்தான் அப்படி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள்
. அதற்குக் காரணம், Saskatchewan மாகாணத்தில் நேற்று (11.7.2021) ஞாயிற்றுக்கிழமை முதல் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதுதான்.
Saskatchewan மாகாணத்தில் கொரோனா குறைந்தது 570 பேரை பலிகொண்ட நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது சுகாதார அமைப்பு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
மாஸ்க் அணிதல், மக்கள் கூடும் எண்ணிக்கையில் கட்டுப்பாடு முதலான அந்த கட்டுப்பாடுகள், நேற்றுடன் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
மதுபான விடுதிகளில் கூடுவது, கடைக்குச் செல்வது, மாஸ்க் இல்லாமல் வெளியே செல்வது போன்ற விடயங்கள் குறித்து இனி மக்கள் தாங்களே முடிவு செய்துகொள்ளலாம்.
Saskatchewan மாகாணம், இனி கொரோனாவை கட்டுப்பாடுகள் மூலம் கட்டுப்படுத்த முயற்சிக்காமல், தடுப்பூசிகளை சார்ந்திருக்கப்போகிறது என்கிறார் பிரிமியர் Scott Moe.