கனேடிய மாகாணமொன்றில் அனைவருக்கும் 500 டொலர் வழங்கும் அரசாங்கம்!
கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் 500 டொலர்களை வழங்க உள்ளது.
சஸ்கட்ச்வானின் முதல்வர் ஸ்கொட் மோய் (Scott Moe) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
2022-2023ம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டுப் பகுதியின் நிதி அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
மாகாணத்தின் பொருளாதாரம் மிகவும் வலுவான நிலையில் காணப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலானர்கள் தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணத்தின் நிதி நிலைமை எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் வேகமாக அபிவிருத்தி அடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு உதவும் நோக்கில் இவ்வாறு 500 டொலர் காசோலை அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சஸ்கட்ச்வானில் வரி செலுத்தும் அனைத்து 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் இந்த 500 டொலர் காசோலை அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதேவேளை, அரசாங்கம் நிவாரணங்களை உரிய முறையில் வழங்கத் தவறியுள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்னதாகவே நிவாரணங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் மாகாணத்தின் எதிர்க்கட்சியான என்.டி.பி தெரிவித்துள்ளது.