மன்னரை கொல்ல திட்டமிட்ட இளவரசர்: வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

Fathima
Report this article
மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை, இளவரசர் முகமது பின் சல்மான் கொலை செய்ய திட்டமிட்டதாக வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இத்தகவலை ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தற்போது கனடாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் புலனாய்வு அதிகாரியான அல்ஜாப்ரி என்பவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் மேலும் தெரிவித்ததாவது, சவுதி இளவரசர் பற்றிய ரகசியங்கள் என்னிடம் உள்ளன.
மன்னர் அப்துல்லாவை கொலை செய்வதற்காக விஷம் பொருந்திய மோதிரத்தை வாங்கினார், இதன் மூலம் கைகுலுக்கி மன்னரை கொல்லவும் அவர் நினைத்தார்.
அந்த நேரத்தில், இளவரசர் முகமது பின் சல்மான் அரசில் எந்த மூத்த பங்கையும் கொண்டிருக்கவில்லை.
எனினும் தனது தந்தையை அரியணையில் ஏற்றுவதற்காக மன்னரை கொல்ல நினைத்தார்.
இப்போது அவர் நான் கொல்லப்பட வேண்டும் என்று நினைக்கிறார். ஏனெனில் எனது தகவல்களால் அவர் அச்சமடைகிறார். நான் நிச்சயம் ஒரு நாள் கொல்லப்படலாம். நான் சாகும்வரை அவர் அமைதியாகமாட்டார் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.