ரொறன்ரோவில் அநேகமான பாடசாலை பஸ் சேவைகள் ரத்து
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் அநேகமான பாடசாலை பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒன்றாரியோ மாகாணத்தில் கடுமையான பனிப்புயல் தாக்குதல் காரணமாக இந்த பஸ் போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை, டொரன்டோ கத்தோலிக்க மாவட்ட பாடசாலை சபை ஆகியன அனேகமான பஸ் சேவைகளை ரத்து செய்துள்ளன.
பாடசாலைகள் திறந்திருந்த போதிலும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் காணப்படும் பனிப்பொழிவினை அகற்றுவதற்கு சில காலம் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலை பஸ் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது ரொறன்ரோ நகரின் அனேக பகுதிகளில் 14 செண்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் வாகன சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தமே குறிப்பிடத்தக்கது.