விடுதலை புலிகளின் ஆயுதங்கள்; தேடுதல் தொடர்கிறது
விடுதலை புலிகள் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, திருகோணமலை குச்சவெளி புடவைக்கட்டு பகுதியில் அகழ்வு பணி இடம்பெற்றது.
புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் புலிகள் இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, குச்சவெளி நீதிமன்றால் விடுக்கப்பட்ட விசேட அனுமதியினூடாக நேற்று (09) காலை குறித்த பகுதியில் அகழ்வு பணி இடம்பெற்றது.
அகழ்வு பணி 10 அடி ஆழம் தோண்டுவதற்கு நீதிமன்றால் அனுமதி வழங்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் ஆயுதப்பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அகழ்வு பணியில் குச்சவெளி பிரதேச செயளாலர், குச்சவெளி, திருகோணமலை மற்றும் புல்மோட்டை விசேட பொலிஸ் பிரிவினரும், புடவைக்கட்டு செந்தூர் பிரிவு கிராம உத்தியோகத்தர் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளரும் விஜயம் செய்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.