புளோரிடா கட்டிட விபத்தில் சிக்கிய இன்னொரு கனேடியரின் உடல் மீட்பு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கட்டிட விபத்தில் சிக்கிய இரண்டாவது கனேடியரின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவரின் அடையாளம் இதுவரை காணப்படவில்லை என்றே அரசு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து ஏற்படும் போது குறித்த கட்டிடத்தினுள் சிக்கியிருந்த நான்கு கனேடியர்களில் இவரும் ஒருவர் என தெரிய வந்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கட்டிட விபத்தில் சிக்கிய கனேடியர்களில் இதுவரை இருவரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
இருவர் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்றே அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
கட்டிட விபத்தில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 86 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 43 பேர்களின் நிலை குறித்து தகவல் இல்லை.
மியாமியில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
முன்னதாக 66 வயதான கனேடியர் Ingrid “Itty” Ainsworth என்பவரின் சடலம் மீட்கப்பட்டது. குறித்த நபர் Montreal பகுதியை சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.