இரண்டாவதாக மோடேனாவா? திரும்பிச் செல்லும் ரொறன்ரோ- பீல் வாசிகள்
கனடாவில் முதல்முறை கொரோனா தடுப்பூசியாக பைசர் போட்டுக் கொண்ட சிலர் இரண்டாவது முறை மோடேனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள விரும்பாமல் திரும்பிச் செல்வதாக பீல் பிராந்திய சுகாதார மருத்துவ உயர் அதிகாரி மருத்துவர் லோறன்ஸ் லோ (Lawrence Law)தெரிவித்துள்ளார்.
பைசர் தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், முதல் முறை பைசர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட ரொறன்ரோ மற்றும் பீல் வாசிகளுக்கு இந்த வாரம் மொடேனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இரண்டாவது முறை மொடேனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள சிலர் விரும்பாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் , தேசிய தடுப்பூசி ஆலோசனைக் குழு இந்த இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளதாக பீல் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் லோறன்ஸ் லோ (Lawrence Law) மேலும் கூறியுள்ளார்.