தலிபான்களின் இரகசிய தலைவர் முதல் முறையாக காபுலுக்கு விஜயம்
தலிபான்களின் இரகசிய தலைவரான முல்லாஹ் ஹய்பத்துல்லாஹ் அகுண்சாதா முதல் முறையாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலுக்கு பயணித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதன் பின்னர். அவர் காபுலுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.
தேசிய ஒற்றுமை பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதற்காக, மூவாயிரம் பேரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இந்தக் கூட்டம் தொடர்பான செய்திகளை அறிக்கையிட, சுயாதீன ஊடகவியலாளர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது தாலிபான்களின் இரகசிய தலைவர் ஆற்றிய உரை, ஒலி வடிவில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
எனினும், அதன் காணொளியோ அல்லது தலிபான்களின் இரகசிய தலைவரின் படமோ வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது.