ஐநா தலைமைச் செயலாளர் பயணம் குறித்து செலென்ஸ்கி அதிருப்தி
ஐக்கிய நாடுகள் சபை தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் (António Guterres) உக்ரைனுக்குச் செல்லும் முன்னர், ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்வது தொடர்பில், உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய போரை நிறுத்த பல்வேறு நாடுகளும் முயன்று தோல்விகண்ட நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையும் (Vladimir Putin) செலென்ஸ்கியையும் (Volodymyr Zelenskyy) நேரடியாகச் சந்திக்க குட்டரஸ் (António Guterres) திட்டமிட்டுள்ளார்.
இதன்போது அவர் அமைதிக்கான கோரிக்கைகளை இருநாட்டிடமும் முன்வைக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் குட்டரஸின் (António Guterres) பயண ஏற்பாட்டில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை என செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) குறிப்பிட்டார்.
அதேவேளை ரஷ்ய வீதிகளில் யாரும் உயிரிழந்திருக்கவில்லை என கூறிய என்பதையும், உக்ரைன்தான் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் மொஸ்கோ மற்றும் கியேவுக்கு பயணிப்பதற்கு முன் குட்டரஸ், துருக்கிக்கு செல்கிறார். இன்று திங்கட்கிழமை அங்காரா செல்லும் அவர் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை சந்திக்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமை மொஸ்கோ சென்று ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்கவிருக்கும் அவர் (António Guterres) வரும் வியாழக்கிழமை உக்ரைன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.