கனேடியருக்கு சீனாவில் பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு: வெளிவரும் பின்னணி
கல்கரி பகுதியை சேர்ந்த கல்வியாளர் ஒருவர் உளவு பார்த்ததாக கூறி கைதான நிலையில், தற்போது அவருக்கு சீன நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
கல்கரி நேரப்படி இரவு 9 மணியளவில் இத்தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி சீனாவுக்கான கனேடிய தூதுரான Dominic Barton குறித்த தகவலை உறுதி செய்ததுடன், நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்துள்ளது தெளிவாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டத்திற்கு புறம்பாகவே Michael Spavor கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், தற்போது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்திற்கு புறம்பானது என்றே முன்னாள் கனேடிய தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஹூவாய் முதன்மை அதிகாரி Meng Wanzhou கைது விவகாரம் தொடர்பிலேயே கல்வியாளர் Michael Spavor சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார் என நம்பப்படுகிறது.
2018 டிசம்பர் மாதம் சீனாவில் உளவு பார்த்ததாக கூறி கைது செய்யப்பட்ட Michael Spavor அப்போது முதல் விசாரணை கைதியாக இருந்து வந்துள்ளார். தற்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சீனா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தண்டனை காலத்திற்கு பிறகு அவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார் எனவும், அதன் பிறகு அவரால் சீனாவுக்கு செல்ல முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்கரி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற Michael Spavor ஆசிரியராக கொரொயாவுக்கு சென்றுள்ளார்.
2001ல் வடகொரியாவுக்கு சென்ற Michael Spavor அதன் பிறகு பல முறை அந்த நாட்டுக்கு சென்று திரும்பினார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சந்திக்க அனுமதி அளித்த மிக சில வெளிநாட்டவர்களில் Michael Spavor என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.