ரொறன்ரோ பள்ளியில் பட்டப்பகலில் சீரழிக்கப்பட்ட மாணவன்: இன்று வெளியாகவிருக்கும் தீர்ப்பு
ரொறன்ரோவில் அனைத்து ஆண்கள் பள்ளி ஒன்றில் மாணவனை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் சக மாணவன் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்றே தெரிய வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவன் கும்பலால் சீரழிக்கப்பட்டதுடன், ஆயுதத்தால் தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளான்.
ரொறன்ரோவில் அமைந்துள்ள St. Michael பள்ளியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. மட்டுமின்றி சம்பவம் முழுமையும் காணொளியாக பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
கால்பந்தாட்டத்தில் தொடர்புடைய மாணவர்களால் இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாணவன் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதி ஏற்க மறுத்துள்ளதுடன், அச்சம்பவத்தில் அவர் தொடர்பு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும் எனவும் கடிந்து கொண்டுள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பெயர்கள் சட்ட காரணங்களால் வெளியிடப்படவில்லை.