கனடாவுக்கு அடுத்த பேரிடி... எச்சரிக்கும் நிபுணர்கள்
மேற்கு கனடாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக உணவு உற்பத்தில் பெரும் பின்னடைவு ஏற்படும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் உணவு தட்டுப்பாடு மட்டுமின்றி விலை உயர்வும் ஏற்படும் என்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வறட்சியை மேற்கு கனடா எதிர்கொண்டு வருகிறது.
சமீப வாரங்களாக வாட்டி வதைக்கும் உச்ச வெப்பநிலையே இதற்கு காரணம் என்பதால், அதன் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர் நிபுணர்கள்.
இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெப்ப அலை, மழையின் அளவு சரிவடைந்துள்ளதும் விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது.
இதனால் வேளான் பொருட்களின் உற்பத்தி கடுமையாக சரிவடைந்துள்ளது. மட்டுமின்றி சில பயிர்கள் இயல்பை விட வேகமாக முதிர்ச்சியடைந்தன அல்லது அவற்றின் வளர்ச்சியில் தேக்கமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், மேற்கு கனடா முழுவதிலும் இருந்து வெளிவரும் தகவலில் அடிப்படையில், பயிரின் தன்மைகள் மற்றும் மகசூல் குறைந்து வருவதையே காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆல்பர்ட்டாவை பொறுத்தமட்டில் கடந்த 5 ஆண்டுகளின் சராசரியாக 74.1 சதவீதம் மிக நல்ல தரம் கொண்ட வேளான் உற்பத்தி நடந்துள்ள நிலையில், தற்போது 36.6 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது.
அதே நிலை தான் பல பகுதியிலும் என ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக உணவு பண்டங்களின் விலைகள் 2021ல் மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மாமிச விலையில் 6.5% மற்றும் அதே அளவுக்கு காய்கறி விலையிலும் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.