பெரும் தொகை டீசலுடன் கடலில் மூழ்கிய கப்பல்!
750 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் சென்ற கப்பலொன்று, டுனீஷியா கடற்பகுதியில் இன்று மூழ்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
எகிப்திலிருந்து, மத்திய தரைக்கடல் நாடான மால்டாவை நோக்கி இக்கப்பல் சென்று கொண்டிருந்தது. சீரரற்ற காலநிலை காரணமாக, டுனிஷியா கடற்பகுதிக்குள் நுழைவதற்கு வெள்ளிக்கிழமை மாலை அனுமதி கோரியிருந்தது.
இந்நிலையில் இக்கப்பல் இன்று காலை கடலில் மூழ்கியுள்ளதாக டுனீஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலிலுள்ள எண்ணெய் கடலில் கசிந்தால் பாரிய சுற்றாடல் மாசடைதலுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
எனினும், இதுவரை இக்கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என டுனீஷிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடலில் மூழ்கிய கப்பல் கினியா நாட்டின் கொடி தாங்கியிருந்ததாக கூறப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த 7 ஊழியர்களும் நேற்று வெளியேற்றப்பட்டிருந்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.