அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
60 வருடங்களுக்கு முன்பே வேற்றுகிரகவாசிகளால் (Aliens) மூன்றாம் உலக போர் தொடங்கிவிட்டது என அமெரிக்க விமானப்படையில் ஆயுத கட்டுப்பாட்டாளராக பணியாற்றிய ராபர்ட் சலாஸ் (Robert Salas) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், ராபர்ட் சலாஸ் (Robert Salas) கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை பிரிவுக்கான கமாண்டராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேற்றுகிரகவாசிகள் (Aliens) மார்ச் 24,1967 ஆம் ஆண்டே இங்கு வந்து அணு ஆயுத அமைப்புகளில் மாற்றம் செய்து அதனை முடக்கிவிட்டதாக அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரியான ராபர்ட் (Robert Salas) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரியான ராபர்ட்.(Robert Salas) இவர் அங்கு விமானப்படையின் உயர்பதவியில் பணியாற்றியிருக்கிறார்.இவர் அணு ஆயுதங்களை வேற்றுகிரகவாசிகள் திருடிச் சென்றதை தான் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த தலைவர்கள் 4 பேர் இது தொடர்பில் ஆவணங்களை வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.