கொல்லப்பட்ட ஹெய்ட்டி ஜனாதிபதியின் மனைவி வெளியிட்ட உருக்கமான தகவல்!
ஹெய்ட்டியின் ஜனாதிபதி நள்ளிரவில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட தருணத்தை தாக்குதலின் போது உயிர்தப்பிய ஜனாதிபதியின் மனைவி வர்ணித்துள்ளார்.
அந்த தாக்குதல் மிகவேகமாக நடந்தது எனது கணவர் ஜொவனலால் ஒரு வார்த்தை கூட தெரிவிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த ஜனாதிபதியின் மனைவி மியாமியில் சிகிச்சை பெற்றுவருகின்றார். டுவிட்டரில் குரல்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் தொடர்ந்து நாட்டிற்காக பணியாற்றப்போவதாக தெரிவித்துள்ளார்.
கண்ணிமைப்பதற்குள் கூலிப்படையினர் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தனர் எனது கணவரை துப்பாக்கி குண்டுகளால் துளைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை எந்த வார்த்தைகளாலும் விபரிக்கமுடியாது என குறிப்பிட்டுள்ள கொல்லப்பட்ட ஜனாதிபதியின் மனைவி ஒரு வார்த்தை கூட சொல்ல அனுமதிக்காமல் ஜொவொனல் போன்ற ஜனாதிபதியை கொலை செய்தவர்கள் எல்லையற்ற குற்றவாளிகளாகயிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது கணவர் அரசியல் நோக்கங்களிற்காக கொல்லப்பட்டார் என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்ககூடிய சர்வஜனவாக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்தமைக்காக கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஜனாதிபதியின் கனவினை கொலை செய்ய விரும்பினார்கள் என ஜனாதிபதியின் மனைவி தெரிவித்துள்ளார்.