இரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு ; இருவர் பலி பலர் படுகாயம்
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இரவு கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளப்பிற்கு வந்த மர்மநபர் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாகத் தொடங்கியதை கண்ட அங்கிருந்தவர்கள் சிதறி ஓடியதாக கூறப்படுகின்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரின் விவரம் குறித்த எந்த தகவலையும் பொலிஸார் வெளியிடவில்லை.
மேலும் நோர்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.