பர்மிங்காம் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் மருத்துவமனையில்
பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், பர்மிங்காமின் போயர் சாலை (Bowyer Road) பகுதியில், செயிண்ட் சேவியர்ஸ் சாலைக்கு (St Saviours Road) அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அவசர தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மேற்கு மிட்லாந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 16 வயது சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தடயவியல் ஆய்வுகள், சிசிடிவி காட்சிகள் சேகரித்தல் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்துதல் உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு அருகிலுள்ள பள்ளிவாசலை குறிவைத்து நடத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என மிட்லாந்து காவல்துறையினர் கூறியுள்ளனர்.