அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 2 ஆண், ஒரு பெண் உயிரிழப்பு!
மேரிலாண்டில் உள்ள புறநகர் பகுதியான கால்டிமோரில் வசிக்கும் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியுடன் சாலைக்கு வந்து சரமாரியாக சுட்டார். இதில் 2 ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். மற்றொருவர் காயம் அடைந்தார்.
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் மேரிலாண்டில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேரிலாண்டில் உள்ள புறநகர் பகுதியான கால்டிமோரில் வசிக்கும் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியுடன் சாலைக்கு வந்து சரமாரியாக சுட்டார்.
இதில் 2 ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். மற்றொருவர் காயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்திய வால்பரை போலீசார் சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறும் போது, ‘அந்த வாலிபர் நீண்ட நாட்களாக சித்த பிரம்மை பிடித்தவர் போல் இருப்பார். அடிக்கடி அண்டை வீட்டாரிடம் ஆக்ரோசமாக நடந்து கொள்வார்’ என்று தெரிவித்தார்.