பல்கலைக்கழகத்திற்குள் துப்பாக்கி சூடு: 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
பல்கலைக்கழகத்திற்குள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே 1,300 கிலோமீட்டர் (800 மைல்) தொலைவில் உள்ளது பெர்ம் பல்கலைக்கழகம்.
இன்று காலை 11 மணிக்கு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த மர்ம மனிதர் ஒருவர் திடீர் என துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் ஜன்னல் வழியாக குதித்து தப்பினர்.இந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானார்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.