துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 12 வயது சிறுவன்
நார்த் யார்க்கில் 12 வயது சிறுவன் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபால்ஸ்டாஃப் அவென்யூ பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இரவு 11 மணிக்கும் சற்று முன்பு குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது என தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே அப்பகுதிக்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சம்பவப்பகுதியில், துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஆபத்தான் நிலையில் 12 வயது சிறுவனை பொலிசார் மீட்டுள்ளனர்.
சிறுவனை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக கூறும் பொலிசார் உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவித்துள்ளனர். விளையாட்டு மைதானம் அருகே இச்சம்பவம் நடந்துள்ளதும், இரவு நேரம் என்பதாலும் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், தாக்குதல்தாரிகள் சம்பவத்திற்கு பின்னர் வாகனங்களில் மாயமாகியுள்ளனர் எனவும்,
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபர்களை அடையாளம் காணப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.