வெளிநாடொன்றில் கவர்னர் மீது சாரமரி துப்பாக்கிச்சூடு! 4 பேர் பலி
பிலிப்பைன்ஸில் நாட்டில் கவர்னரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸில் நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில் குறித்த குழுக்கள் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.
[RENKMG[
இந்த நிலையில், அந்நாட்டின் லனொ டி சுர் மாகாண கவர்னர் அலண்டோ அடியாங் இன்று காரில் சென்றுகொண்டிருந்தார்.
மேலும், அவருக்கு பாதுகாப்பாக பாதுகாவலர்களும் உடன் சென்றனர். லனொட் டி சுர் மாகாணம், புகிங்கான் மாகாண எல்லைப்பகுதி கிராமத்தில் அலண்டோ காரில் சென்றபோது அவரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் கவர்னர் லனொட் டி சுர் படுகாயமடைந்தார். ஆனால், அவரது பாதுகாவலர்கள் 4 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த கவர்னர் லனொட் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.