பிரேசிலில் அத்தியாவசிய மருந்து பற்றாக்குறை; தவிப்பில் மருத்துவர்கள்
கொரோனாவின் பிடியில் சிக்கித்தவிக்கும் பிரேசிலில் அத்தியாவசிய மயக்க மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு இதுவரை ஒரு கோடியே 37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ரியோ டி ஜெனிரோ மற்றும் சாவ் பாலோ நகரிலுள்ள மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் மயக்க மருந்துக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்தாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.