பிரான்ஸில் வீடொன்றின் கதவை தட்டிய நபரால் காத்திருந்த அதிர்ச்சி
பிரான்ஸில் வீடொன்றின் கதவை திறந்து ஆயுததாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதில், ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் L'Haÿ-les-Roses (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள 14 ஆம் இலக்க மெற்றோ நிலையத்துக்கு அருகே உள்ள வீட்டின் கதவினை தட்டிய ஆயுததாரி ஒருவர், 24 வயதுடைய ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
கதவினை திறந்துகொண்டு வெளியே வந்த நிலையில் அவர் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுததாரி தப்பிச் சென்றுள்ள நிலையில் காயமடைந்த நபர் Kremlin-Bicêtre மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7.62 மி.மீ கலிபர் வகை துப்பாக்கி ரவைகளை சம்பவ இடத்தில் இருந்து பொலிஸார் மீட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.