சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் அமோக வெற்றியை பெற்ற இலங்கை தமிழர்!
சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும் துணை பாதுகாப்பு அமைச்சராகவும், துணை பிரதமராகவும் தர்மன் சண்முகரத்தினம் பதவி வகித்து வந்தார்.
இவ்வாறான நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தர்மன் சண்முகரத்தினத்தின் தாய் மற்றும் பேரனார் யாழ்ப்பாண ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.