தந்தை மீது பிரபல பாடகி அளித்த பரபரப்பு புகார்..!
பிரபல பாடகி பிரிட்டனி ஸ்பியர்ஸ் தனது தந்தை தன்னை திருமணம் செய்து கொள்ளவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ அனுமதிக்க வில்லை என்றும் தன்னை ஒரு ‘அடிமை’ போல நடத்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பொப் நட்சத்திரங்களுள் ஒருவர் பிரிட்டனி ஸ்பியர்ஸ். அவரது அவரது தந்தை ஜேமிக்கும் இடையில் நீண்ட வருடங்களாக சட்டபோராட்டம் நடைபெற்று வருகிறது.
68 வயதான ஜேமி ஸ்பியர்ஸ், பிரிட்டனி ஸ்பியர்ஸின் கிட்டத்தட்ட 60 மில்லியன் டொலர் சொத்துக்களை மேற்பார்வையிட்டு வருகிறார்.
அவர் ஒரு தொழில்முறை மேலாண்மை நிறுவனத்துடன் சேர்ந்து உரிமம் பெற்ற தொழில்முறை பாதுகாவலர் என ஸ்பியர்ஸின் தனிப்பட்ட பாதுகாப்பை தற்காலிக அடிப்படையில் எடுத்துக் கொண்டுள்ளார்.
பொதுவாக தங்களை கவனித்துக் கொள்ள முடியாதவர்களுக்கு கன்சர்வேட்டர்ஷிப் என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் சொத்துக்களையும் அவர்களையும் பாதுகாத்து வருவது ஆகும்.
பாடகர் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தையிடம் இருந்து பாதுகாப்புக்கான கன்சர்வேட்டர்ஷிப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் தன்னை தந்தையின் பாதுகாப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என கூறி இருந்தார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிட்டனி ஸ்பியர்ஸ் பேசிய 23 நிமிட தொலைபேசி உரையாடல் நேற்று நீதிமன்ற அறையில் ஒளிபரப்பப்பட்டது.
பிரிட்டனி ஸ்பியர்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிபதியிடம், அவர் போதை மருந்து உட்கொண்டதாகவும், தனது விருப்பத்திற்கு எதிராக செயல்பட நிர்பந்திக்கப்பட்டதாகவும், கடந்த 13 ஆண்டுகளில் தான் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்க கருத்தடை சாதனம் கட்டாயமாக பொருத்தப்பட்டதாகவும் கூறி உள்ளார்.