இளம் வயதிலேயே பறிகொடுத்து விட்டோம்: ஆல்பர்ட்டா தாயார் மறைவில் ஸ்தம்பித்த குடும்பம்
இளம் வயது எட்மண்டன் தாயார் ஒருவர் கொரோனாவுக்கு பலியான சம்பவம், அவரது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஆல்பர்ட்டா மாகாணத்தில் பதிவான 17 கொரோனா இறப்புகளில் 30 வயதான Chantel Gregoire ஒருவர்.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான இவர், தனியாக வசித்து வந்தார். Chantel Gregoire-ன் இழப்பு மொத்த குடும்பத்தையும் ஸ்தம்பிக்க செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவரது மூத்த சகோதரர் Fabian Gregoire.
Chantel கடந்த 7 ஆண்டுகளாக எட்மண்டனில் அமைந்துள்ள குமி அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். குறித்த அழகு நிலையத்தில் தனிமனித இடைவெளி, மாஸ்க் மற்றும் அடிக்கடி கை சுத்தல் செய்தல் உட்பட அனைத்தும் தவறாமல் பின்பற்றப்பட்டு வந்துள்ளதாக Fabian Gregoire தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பில் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவறாமல் பின்பற்றி வந்துள்ள தமது சகோதரி, தடுப்பூசி போட்டுக்கொள்ள தாமதித்ததே, இந்த பேரிழப்புக்கு காரணம் என கண்கலங்கியுள்ளார் Fabian Gregoire.
தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்னர், தமது சகோதரி அதை மிகவும் தீவிரமாக அணுகத் தொடங்கியதாகவும், ஆனால் வேலை நிமித்தம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அவருக்கு கால தாமதம் ஏற்பட்டதாக Fabian Gregoire குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயாரான Chantel கடின உழைப்பாளி என குறிப்பிட்டுள்ள அவர் சகோதரர், ஆனால் எப்படி அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை என கண்கலங்கியுள்ளனர்.