மோட்டார் சைக்கிள் விபத்து: 7 பிள்ளைகளின் தாயார் பரிதாப மரணம்
ஆல்பர்ட்டாவின் ஃபேர்வியூ பகுதியில் நடந்த மோட்டார் சைக்கில் விபத்தில் சிக்கி 7 பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
ஆல்பர்ட்டாவின் Grande Prairie பகுதியில் குடியிருந்து வந்த 42 வயதான Chantelle Jadot வெள்ளிக்கிழமை பரிதாபமாக மரணமடைந்தவர்.
முதற்கட்ட விசாரணையில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தெற்கு நோக்கி பயணித்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது வடக்கு நோக்கிய பிக்கப் டிரக் ஒன்று இந்த மோட்டார் சைக்கில் ஒன்றுடன் மோதியதாகவும் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தில் Chantelle Jadot சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாவும், இன்னொரு மோட்டார் சைக்கிள் பயணிக்கும் அந்த டிரக் சாரதிக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரெட் எர்த் க்ரீக் பகுதியில் Chantelle Jadot -கு சொந்தமாக எரிபொருள் நிலையம் ஒன்று செயல்பட்டு வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு 3 வயதில் இருந்து 19 வயதுடைய 7 பிள்ளைகள் இருப்பதாகவும், சமீப ஆண்டுகளாக Grande Prairie பகுதியில் குடியேறி இருந்தாலும், ரெட் எர்த் க்ரீக் பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தை செயல்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.