குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி ஏற்றுவது குறித்து கவனம்
குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி ஏற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சின்னம்மை நோய்க்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசியை குரங்கம்மை நோய்க்கு பயன்படுத்துவது குறித்து கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவில் சின்னம்மைக்கான தடுப்பூசி ஏற்றுகை சில தசாப்தங்களாகவே நிறுத்தப்பட்டுள்ள நிலையில் குரங்கம்மை பீதி உருவாகியுள்ளது.
குரங்கம்மையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சின்னம்மை தடுப்பூசியின் பயன்படுத்த முடியும் என உலக அளவிலான சான்றுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சின்னம்மை தடுப்பூசியை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக திரேசா டேம் தெரிவித்துள்ளார்.