ராணியாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அமெரிக்க அதிபருக்கு இவ்வளவு கட்டுப்பாடா!
மறைந்த பிரித்தானிய ராணியாரின் (Queen Elizabeth II) இறுதிச்சடங்குகளின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) பேருந்தில் பயணம் மேற்கொள்வார் என தகவல் கசிந்துள்ளது.
பிரித்தானிய ராணியாரின் (Queen Elizabeth II) இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து, ஏற்கனவே முடிவு செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் (Jill Biden)ஆகியோர் பிரித்தானியா வர உள்ளனர்.
எனினும் பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு, ஜோ பைடன் (Joe Biden) மற்றும் அவரது மனைவி உள்ளிட்டவர்கள், எஞ்சிய சிறப்பு விருந்தினர்களுடன் பேருந்தில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவர இருப்பதால் limo வாகனங்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துள்ளதுடன் அவர்களின் உத்தியோகப்பூர்வ வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயணிகள் விமானங்களில் பிரித்தானியா திரும்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் , ஹெலிகொப்டர் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோ பைடன் பேருந்தில் பயணப்படுவாரா?
இதனிடையே, லண்டனில் உள்ள வெளிநாட்டு தூதுவர் ஒருவர், ஜோ பைடன் (Joe Biden) பேருந்தில் பயணப்படுவாரா? நம்ப முடிகிறதா என தமது சகாக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் லண்டனில் பாதுகாப்பு பலப்படுத்துவதற்காக elite SAS துருப்புகளை களமிறக்கப்பட்டுள்ளதுடன், 10,000 பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மொத்தம் 2,000 சிறப்பு விருந்தினர்கள் லண்டனில் ராணியாரின் இறுதிச் சடங்குகளுக்காக வர உள்ளனர். உலகத் தலைவர்களை பயணிகள் விமானத்திலேயே லண்டன் வர உள்விவகார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், தனிப்பட்ட விமானங்களில் வர விரும்பும் சிறப்பு விருந்தினர்களை சிறு விமான நிலையங்களில் தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா நிர்வாகம் ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான் என கூறப்படுகின்றது.
மேலும் ஜி7 உச்சி மாநாடுக்கு கலந்துகொள்ள வந்த ஜோ பைடன் (Joe Biden) , இரண்டு மிகப்பெரிய லிமோ வாகனங்களுடன், 400 உளவுத்துறை அதிகாரிகள் புடைசூழ தரையிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.