328 பேர்கள் மட்டுமே வாக்களித்து தெரிவான ஒரு நாட்டின் ஜனாதிபதி
சோமாலியாவின் புதிய ஜனாதிபதியை நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்து தெரிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோமாலியாவின் புதிய ஜனாதிபதியாக ஹசன் ஷேக் மஹ்மூத் தெரிவாகியுள்ளார். கடந்த 2017 முதல் ஆட்சியில் இருக்கும் Mohamed Abudallahi Farmajo என்பவரையே அவர் தோற்கடித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலானது பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு நாட்டின் 328 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தெரிவு செய்யும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து 214 வாக்குகள் பெற்று சோமாலியாவின் புதிய ஜனாதிபதியாக மஹ்மூத் தெரிவானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஃபார்மஜோ 110 வாக்குகளை பெற்றார்.
ஒரு உறுப்பினர் வாக்களிக்காத நிலையில், மூவர் தங்கள் வாக்குச்சீட்டை பாழாக்கியதாக கூறப்படுகிறது. மூன்றாவது சுற்று வாக்குப்பதிவும் முடிவடைந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஜனாதிபதி தெரிவு 15 மாதங்கள் தாமதமானது.
தற்போது ராணுவ விமானத் தளத்திலேயே பதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, தேர்தலை நடத்தி முடித்துள்ளனர். புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மஹ்மூத் அடுத்த நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்.
மட்டுமின்றி நாட்டில் தலைவிரித்தாடும் பஞ்சம் காரணமாக 3.5 மில்லியன் சோமாலியர்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.