ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நேர்ந்த நிலை!
இலங்கையில் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 21 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.
70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை தடுமாறி வருகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ராஜினாமா செய்ய வலியுறுத்தி, கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் நேற்று 74-வது நாளை எட்டியது.
இந்தச் சூழலில், ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைத்து நுழைவுவாயில்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று முன்தினம் (19-06-2022) இரவு அடைத்தனர்.
அதைத் தொடர்ந்து, ஒரு புத்த துறவி, 4 பெண்கள் உள்ளிட்ட 21 பேரை பொலிஸார் நேற்று (20-06-2022) கைது செய்தனர்.
[V2PEEG ]
ஜனாதிபதி செயலகத்தின் நுழைவுவாயில்கள் வழியாகத்தான் நிதி அமைச்சகத்துக்கும், அரசு கருவூலத்துக்கும் செல்ல முடியும்.
நிதி அமைச்சகத்துக்கு சர்வதேச நாணய நிதிய குழு வருகைதரும் நிலையில், 2 நுழைவுவாயில்களை திறந்து வைத்திருக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.