நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் மட்டக்களப்பை சேர்ந்தவர்! வெளியான தகவல்

batticaloa New Zealand Sri Lankan attacked
By Sulokshi Sep 04, 2021 06:36 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  நியூசிலாந்தின் ஓக்லாண்ட்டில் நேற்று தாக்குதல் நடத்திய இலங்கையர் தொடரிலான தகவல்கள் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்திய  32 வயதான குறித்த நபர் , மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

 அவரது பெயர் எம்.சம்சுதீன் என்றும் கூறப்படுகிறது. நேற்றையதிம் நியூசிலாந்தின் ஓக்லாண்ட்டில் குறித்த நபர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் பரப்பைனை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நியுசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள லைன் பல்பொருள் அங்காடியில் தாக்குதல் எப்படி இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஆணையாளர் அன்று கோஸ்டர் (Coaster) மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் அவர் வழமைக்கு மாறான விதத்தில் நடந்துகொள்ளவில்லை வழமை போல புகையிரதத்தில் பல்பொருள் அங்காடிக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல்பொருள் அங்காடியில் டிரொலியை எடுத்துக்கொண்டு அவர் வழமைபோல பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார் பத்து நிமிடங்கள் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர் அவர் தாக்குதலை ஆரம்பித்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பல்பொருள் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கத்தியை அவர் அகற்றுவதை சிசிடிவிகள் காண்பித்துள்ளன,அவர் சுடப்பட்டதை தொடர்ந்து அந்த கத்தி அவருக்கு அருகில் மீட்கப்பட்டது. அந்த ,சம்பவம் நடந்த இடத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னர் வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் தாக்குதல் இடம் பெற்று 60 முதல் 90 செகன்ட்களில் கண்காணிப்பு குழுவினர் சத்தங்களையும் மக்கள் தப்பியோடுவதையும் அவதானித்தனர் என்பதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளதாகவும் கூறினார்.

அந்த நபர்தீவிரவாத கருத்துக்களை கொண்டிருந்தவர் என்பதை அறிந்து கடந்த ஐந்து வருடங்களில் அவருடன் பேசுவதற்கும் அவரது நடத்தையை மாற்றுவதற்கும் முயற்சி செய்தோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தவும் முயன்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவரை 53 நாட்கள் தொடர்ச்சியாக கண்காணித்தோம்- இது நியுசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் செலவுமிக்க நடவடிக்கை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 30 பேர் அவரை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். 2016 இல் முகநூலில் பயங்கரவாதிகள் குறித்து அனுதாபத்துடன் கருத்து வெளியிட்டதை தொடர்ந்து பொலிஸாரின் கவனம் அவரை நோக்கி திரும்பியுள்ளது. சந்தேகநபர் முகநூலில் வன்முறைமிகுந்த யுத்த வீடியோக்களை வெளியிட்டுள்ளதுடன் வன்முறை தீவிரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்,

இதனை தொடர்ந்து பொலிஸார் அவருடன் பேசியுள்ளனர். 2017 இல் சிரியாவிற்கு செல்ல முயன்றவேளை அவர் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தார் அவர் தங்கியிருந்த தொடர்மாடியில் சோதனையிட்டவேளை இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த விடயங்கள் காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2018 இல் அவர் விடுதலை செய்யப்பட்டார்,எனினும் பிணையில் விடுதலை செய்யப்பட்டவேளை கத்தியை கொள்வனவு செய்தமைக்காக அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

2018 இல் அவருக்கு எதிராக பயங்கரவாத சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான முயற்சிகளை நீதிமன்றம் நிராகரித்தது. ஏற்கனவே மூன்று வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் ஐஏஸ் பிரச்சாரங்களிற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது,அவரை கண்காணிப்பில் இருக்கவேண்டிய தண்டனை விதிக்கப்பட்டது அவர் இணையத்தை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

அவர் தான் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியுள்ளதாக கருதிய நபர் தாங்கள் அவரை பின்தொடர்வதை அந்த நபர் கண்டுபிடிப்பதற்காக கண்காணிப்பு குழுவினர் சற்று தொலைவிலேயே இருக்கவேண்டியிருந்தது என பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் நபர் தான் கண்காணிக்கப்படுகின்றேன் என்பதை உணர்ந்திருந்த நிலையில் சந்தேக நபர் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் ஆணையாளர் கூறினார்.

https://canadamirror.com/article/sri-lankan-killed-in-new-zealand-police-shooting-1630649749

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US