அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடிச்சென்ற இலங்கை ஏதிலிக்கு நேர்ந்த துயரம்
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேசா தகவல்கள் கூறுகின்றன.
44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் நவம்பர் 20 ஆம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற அவர் , நிரந்தர பாதுகாப்பு வீசாவிற்காக விண்ணப்பித்திருந்ததாகவும், இறுதிவரை அந்த வீசா கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
உயிரிழந்தவரின் மனைவியும்,மகளும் இலங்கையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது உடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.