வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கை பெண்களுக்கான முக்கிய தகவல்!
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லவிருக்கும் இலங்கை பெண்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த குறைந்தபட்ச வயது வரம்பு 23-ல் இருந்து 21 ஆக குறைத்துள்ளது.
இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.
அன்னிய செல்வாணி கையிருப்பு குறைந்ததால், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யவும் தடுமாறி வருகிறது.
இதனால், எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
மேலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை தொடங்க இலங்கை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல பெண்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த குறைந்தபட்ச வயது வரம்பு 23-ல் இருந்து 21 ஆக குறைத்துள்ளது.
[APFIDQ ]
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் ஒரு நடவடிக்கையாக இலங்கை அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2013- ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் பணியாற்றிய 7-வயது இலங்கை சிறுமி கொடூரமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இதையடுத்து, வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்வதற்கான வயது வரம்பை இலங்கை அரசு அமல்படுத்தியது.