எமக்கு எவரும் அழுத்தம் கொடுக்க முடியாது! அமைச்சர் இறுமாப்பு
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எந்தவொரு கட்சிக்கும் மற்றுமொரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை இருக்கின்றது.
எனினும் திருட்டுத்தனமாக மாறுவேடம் போட்டாலும் வெளியிலேயே ஆட வேண்டியேற்படும்.
ஸ்ரீலங்கா பொதுன பெரமுன எந்த அரசியல் கட்சிக்கும் அஞ்சாது.
வால் நாயை ஆட்டாது, நாயே வாலை ஆட்டும் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாய், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் வால் என்ற அர்த்தத்தில் ரோஹித்த அபேகுணவர்தன இதனை கூறியுள்ளார்.