கனடாவின் பூர்வக்குடி பிரதேசம் ஒன்றில் அவசரநிலை பிரகடனம்
கனடாவின் பூர்வக்குடி பிரதேசம் ஒன்றில் போதை மருந்து புழக்கம் அதிகரித்ததை அடுத்து அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடபகுதியில் அமைந்துள்ள பூர்வக்குடி பிரதேசங்கள் சில இணைந்து குறித்த முடிவை அறிவித்துள்ளன.
மேலும், போதை மருந்து பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்க போதுமான நிதி அளிக்க வேண்டும் எனவும், பெடரல் நிர்வாகமும் பிராந்திய நிர்வாகங்களும் உரிய நடவடிக்கை முன்னெடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
போதை மருந்து பழக்கத்தால் அதிக மக்களை நாங்கள் இழந்துள்ளோம், தற்போது இரண்டு பெருந்தொற்றை நாங்கள் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என பூர்வக்குடி பிரதேசங்களின் 11 தலைவர்கள் ஒன்றாக குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் போதிய நிதி ஒதுக்காத நிலையில், மனமுடைந்து தற்போது கூட்டாக பூர்வக்குடி பிரதேசங்களில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.