ஒன்ராறியோவில் 15 மாத பிள்ளையை கொடூரமாக கொன்ற பெண்
ஒன்ராறியோவில் 15 மாத பிஞ்சு குழந்தையை கொடூரமாக கொலை செய்த வழக்கில் Strathroy பகுதியை சேர்ந்த பெண் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த கொலை வழக்கில் தற்போது Strathroy பகுதியை சேர்ந்த 42 வயது Meggin Van Hoof என்பவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த 2015 அக்டோபர் மாதம் வடக்கு மிடில்செக்ஸ் பகுதியை சேர்ந்த 15 மாத குழந்தை Nathaniel McLellan காயங்களுடன் மீட்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது.
இந்த வழக்கை Strathory-Caradoc பொலிசார் விசாரணை செய்து வந்துள்ளனர். இவர்களுடன் பல முன்னணி விசாரணை அமைப்புகளும் உதவியுள்ளது.
குழந்தை Nathaniel McLellan இறந்ததன் பின்னர் தொடர்புடைய பல்வேறு புகார் மனுக்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது நீண்ட 6 வருடங்களுக்கு பின்னர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.