பிரான்சில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக கொந்தளித்த மாணவர்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிபர் வேட்பாளர்களான மக்ரோன் மற்றும் மரைன் லு பென்னுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஏப்ரல் 10ம் திகதி நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதல் சுற்றில், இம்மானுவேல் மக்ரோன் 27.42 சதவீத வாக்குகளையும், மரைன் லு பென் 24.92 சதவீத வாக்குகளையும் பெற்று முதல் இரண்டு இடங்களை வென்றனர்.
இடதுசாரி தலைவர் Jean Luc Melenchon 22 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 24ஆம் திகதி நடைபெறும். இதில், முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மக்ரோன் -மரைன் லுபென்னுடன் மோதினர்.
இதற்கிடையில், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பாரிஸில் Macron-Marine Le Pen க்கு எதிராக களத்தில் குதிக்கின்றனர்.
பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதல் சுற்று முடிவுகளுக்கு மாணவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த பள்ளிகளை சூழ்ந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பாளர்கள் இடதுசாரி வேட்பாளர் Jean Luc Melenchon ஐ ஆதரிப்பதாக கூறப்படுகிறது.